இலங்கையில் தீவிரவாத முகாம் கண்டுபிடிப்பு

இலங்கை நுவரேலியா பகுதியில் தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் தீவிரவாத பயிற்சி முகாம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தீவிரவாத முகாம் கண்டுபிடிப்பு
x
இலங்கை சாய்ந்தமருது பிரதேத்தில் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய  நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் நுவரேலியா பகுதியில் தீவிரவாத முகாம் செயல்பட்டு வந்ததாக அவர் கூறியதை அடுத்து அப்பகுதியில் உள்ள இரண்டு மாடி கட்டிடமொன்றை போலீஸ் மற்றும் விசேட அதிரடி படையினர்சோதனை செய்தனர்.தாக்குதலுக்கு முக்கிய காரணமான சஹாரான் ஹாசிம் உட்பட 38 பேர் டி 56 ரக துப்பாக்கிகளை கொண்டு தாக்குதல் நடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அங்கு பயிற்சியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.இது தொடர்பாக கட்டிடத்தின் உரிமையாளர் மற்றும் பணியாளர் ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்