பயங்கரவாதிகள் கைகளில் ஆயுதங்கள் உள்ளன : முன்னாள் அமைச்சர் கருணா ஒப்புதல்

இலங்கையில் பயங்கரவாதிகளின் கைகளில் விடுதலை புலிகளின் ஆயுதங்கள் உள்ளதாக இலங்கை முன்னாள் அமைச்சர் கருணா தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதிகள் கைகளில் ஆயுதங்கள் உள்ளன :  முன்னாள் அமைச்சர் கருணா ஒப்புதல்
x
மட்டக்களப்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் பயங்கரவாதிகளிடம் காணப்படுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை முழுவதுமாக மறுக்க முடியாது என கூறினார்.விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்தபோது தம்மிடம் இருந்த ஆயுதங்கள் ராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.குறிப்பிட்ட சில ஆயுதங்கள், தமிழ் தேசிய ராணுவம் என்பதை உருவாக்கி அந்த அமைப்பை தடை செய்தபோது அந்த ஆயுதங்கள் வர்த்தகத்திற்காக விநியோகிக்கப்பட்டதாகவும் கருணா கூறினார்.எனவே, விடுதலை புலிகளின் ஆயுதங்களை பயங்கரவாதிகள் வைத்திருப்பதை முழுமையாக  ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் சில ஆயுதங்கள் அவர்களிடம் இருப்பதை ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும் எனவும் கருணா தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்