பிரேசில் பள்ளியில் துப்பாக்கிச்சூடு : 10 பேர் உயிரிழப்பு - 20 பேர் காயம்
பிரேசில் சாவ் பாலோ நகரில் உள்ள பள்ளி ஒன்றில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 மாணவர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
20 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். பள்ளியில் காலை வகுப்புகள் நடைபெற்று கொண்டிருந்த போது துப்பாக்கிகளுடன் உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக சுட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருவதாக மாநில ஆளுநர் ஜோவோ டோரியா தெரிவித்துள்ளார்.
Next Story