சுதந்திர தேவி சிலை மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்

அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் பத்திரமாக மீட்டனர்.
சுதந்திர தேவி சிலை மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்
x
நியூயார்க் நகரில் அமைந்துள்ள சுதந்திர தேவி சிலை அமெரிக்காவின் முக்கிய அடையாள சின்னமாக திகழ்கிறது. இந்த சிலையின் மேல் பெண் ஒருவர் ஏறுவதை கண்ட சிலர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு சென்ற போலீசார் சுமார் 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி அந்த பெண்ணை பத்திரமாக இறக்கினர். அமெரிக்காவில் குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத்துறை ஏஜென்ஸி முறையை ஒழிக்க  வலியுறுத்தி அப்பெண் போராட்டத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் அவர்  கைது செய்யப்பட்டார்.

Next Story

மேலும் செய்திகள்