கோழிக்குஞ்சு ஆணா, பெண்ணா..? கண்டறிந்து கூறினால், ரூ.38 லட்சம் சம்பளம்.

சர்வதேச அளவில், வேலை வாய்ப்பின்மை பிரச்சினையாக உள்ள நிலையில், விநோதமான ஒரு வேலை பற்றிய செய்தி தொகுப்பு.
கோழிக்குஞ்சு ஆணா, பெண்ணா..? கண்டறிந்து கூறினால், ரூ.38 லட்சம் சம்பளம்.
x
எவ்வளவு தான் படித்திருந்தாலும், படித்த வேலைக்கு ஏற்ற வேலை கிடைப்பது குதிரைக் கொம்பு தான்... வேலை தேடித் தேடியே ஓய்வு பெற்றவர்கள், ஏராளம்... இந்த நிலையில் தான், இங்கிலாந்தில் இந்த வேலை பரபரப்பாக பேசப்படுகிறது.

இங்கிலாந்தின் கோழிப் பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிக் குஞ்சுகள் ஆணா, பெண்ணா என்பதைக் கண்டறியும் வேலையைச் செய்பவர்களுக்கு, ஆண்டுக்கு சுமார் 38 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. இவ்வளவு பெரிய தொகை சம்பளமாகக் கிடைத்தாலும், இந்த வேலையைச் செய்வதற்கு ஆட்கள் வருவதில்லை என்பதுதான் பெரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. 

வளர்ந்த பிறகு கோழியையும், சேவலையும் கண்டறிவது சுலபம். ஆனால் கோழிக் குஞ்சாக இருக்கும்போது கண்டறிவது கடினம். அனுபவம் வாய்ந்தவர்களாலேயே இந்த வேலையைச் செய்ய முடியும். அதிலும் ஒரு மணி நேரத்தில் 800 முதல் 1200 கோழிக் குஞ்சுகளை கையில் எடுத்து ஆணா, பெண்ணா என்று பரிசோதிக்க வேண்டும். 

ஒரு கோழிக் குஞ்சைப் பரிசோதிக்க 3 நொடிகள் மட்டுமே கிடைக்கும். அதனால் அதிக சம்பளம் கொடுத்து அனுபவசாலிகளை பணியில் அமர்த்துகின்றனர். அதிக சம்பளம் வழங்கப்பட்டாலும், இந்த வேலைக்கு ஆட்கள் கிடைப்பதே இல்லையாம்.

இங்கிலாந்து முழுவதும் 100 முதல் 150 பேர்தான் இந்த வேலையைச் செய்து வருகின்றனர். கடந்த ஆண்டில் ஒருவர் கூட இது சார்ந்த படிப்பிலோ, புதிதாக வேலையிலோ சேரவில்லை. 

இங்கிலாந்தில் இந்த வேலைக்கு கடும் கிராக்கி நிலவிக்கொண்டிருக்க, தென்கொரியாவில் கடந்த 2 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கானவர்கள் கோழி குஞ்சுகளின் இனத்தை கண்டறியும் இந்த படிப்பினை முடித்து, பயிற்சிக்கு தயாராகி வருகின்றனர்

Next Story

மேலும் செய்திகள்