"என் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லை".. கலெக்டர் வேதனை

x

சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், என் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லை என கூறி மாவட்ட ஆட்சியர் வேதனை தெரிவித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சிவகங்கை மாவட்டம் தூதை கிராமத்திலுள்ள ரேஷன் கடை தெருவில், சிமெண்ட் சாலையை தனி நபர்கள் சிலர் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள், ஏற்கனவே ஆட்சியரிடம் மனு அளித்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அவர்கள் குழந்தைகளுடன் ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கண்ட ஆட்சியர் ஆஷா அஜித், என் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லை என போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கூறி வேதனைப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்