பள்ளிக்கு வராத 4 மாணவிகள்.. பெற்றோருக்கு சென்ற போன் கால்.. ஏற்காடு அடிவாரத்தில்.. போலீஸ் கண்ட அதிர்ச்சி காட்சி

x

சேலம் கோட்டை அரசு மகளிர் பள்ளியில் பயின்ற 4 மாணவிகள் மாயமானதால் பரபரப்பை ஏற்படுத்தியது. 11 ஆம் வகுப்பு மாணவிகள், வழக்கம்போல் வீட்டிலிருந்து பள்ளிக்கு புறப்பட்டு சென்ற நிலையில், பள்ளிக்கு வராததால் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவல்நிலையத்தில் சம்பந்தப்பட்ட மாணவிகளின் பெற்றோர் புகார் அளித்தனர். விசாரணையில், மாணவிகள் ஏற்காடு அடிவாரப் பகுதியில் நின்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து மாணவிகளை போலீசார் மீட்டனர். பள்ளி வகுப்பை புறக்கணித்து மாணவிகள் சுற்றித் திரிந்தது விசாரணையில் தெரியவந்தது.


Next Story

மேலும் செய்திகள்