"ஏற்காட்டிற்கு சுற்றுலா சென்ற சென்னை நபர்களுக்கு நேர்ந்த கதி.." - பள்ளத்திற்குள் பாய்ந்த வேன் - பரபரப்பு காட்சி

x

சேலம் ஏற்காடு சென்று வந்த சுற்றுலா வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.....

10க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.....

சேலம் ஏற்காட்டிற்கு சுற்றுலா வாகனத்தில் சென்னை பல்லாவரம் அடுத்த திருநீர்மலை பகுதியில் இருந்து நேற்றைய தினம் 19 பேர் சுற்றுலா வந்துள்ளனர். பின்னர் ஏற்காடு சுற்றுலா முடித்து வீடு திரும்புவதற்காக ஏற்காடு மலைப்பாதையில் இறங்கி கொண்டிருந்தனர். அப்போது சோதனைசாவடி அருகே சுற்றுலா வாகனம் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சுவரின் மீது பள்ளத்தில் மோதி கவிழ்ந்தது. இதில் சுற்றுலா வாகனத்தில் பயணித்த பத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.இந்த நிலையில் அவர்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து ஏற்காடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்