திருமண நிச்சயமாகி காவிரி ஆற்றுக்கு சென்ற பெண் சடலமாக திரும்பிய சோகம்

x

கும்பகோணம் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி, திருமணம் நிச்சயிக்கப்பட்டவர் உட்பட 2 பெண்கள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் மாங்குடி காவிரி ஆற்றில், உறவினர்கள் சிலர் குளிக்க சென்றுள்ளனர். அப்போது மீரா, அபிராமி ஆகிய இரண்டு பெண்கள் ஆற்றில் இழுத்து செல்லப்பட்டுள்ளனர். இதனையடுத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட தீயணைப்புத்துறையினர், இரண்டு பெண்களையும் சடலமாக மீட்டுள்ளனர். இதில் மீரா என்பவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்