எம்எல்ஏ காலில் விழுந்து கதறிய பெண் - கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு

x

மதுரை சோழவந்தான் அருகே டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக் கோரி கிராமசபை கூட்டத்தில் எம்எல்ஏ காலில் விழுந்து பெண் கதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. மண்ணாடிமங்கலத்தில் சோழவந்தான் தொகுதி எம்எல்ஏ வெங்கடேசன் தலைமையில் கூட்டம் நடைபெற்றபோது, அதில் கலந்து கொண்ட ஒரு பெண் திடீரென்று, எம்எல்ஏ காலில் விழுந்து, டாஸ்மாக் மதுபானக் கடையை உடனடியாக மூட வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார். இதை சற்றும் எதிர்பாராத எம்எல்ஏ, டாஸ்மாக் கடையை மூட மாவட்ட ஆட்சியரிடம் கூறி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து, அந்த பெண்ணை அனுப்பி வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்