தோழனை பார்க்க சென்ற தோழி..ரத்த ஆற்றில் மிதந்த கொடூரம்... குலை நடுங்க வைத்த நண்பன்....

x

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில், பணம் கேட்டு தராத ஆத்திரத்தில் பெண் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.

கனகம்மாசத்திரம் பாளையக்கார தெருவை சேர்ந்த கஜேந்திரன் என்பவரது மனைவி சுசிலாவுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக சுசிலா தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், சுசிலா தனது ஆண் நண்பர் ஒருவரை சந்திக்க திருத்தணி வந்தபோது, கத்திக்குத்து காயங்களுடன் கிடந்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சுசிலாவை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தலைமறைவாக இருந்த திருவாலங்காடு முத்துகொண்டாபுரத்தை சேர்ந்த ரஞ்சித்தை கைது செய்து விசாரித்தனர். இதில், சுசிலா பணம் தர மறுத்ததால், ஆத்திரத்தில் ரஞ்சித் கத்தியால் குத்தியது தெரியவந்தது.


Next Story

மேலும் செய்திகள்