குழந்தை பிறந்த 10 நாட்களில்... மின்சார வயரை பிடித்த இளம் பெண்- துடிக்க துடிக்க கதறி பலி சென்னையில் பயங்கரம்

x

சென்னையில், குழந்தை பிறந்த 10 நாட்களில் இளம் பெண் மின்சார வயரை பிடித்து தற்கொலை செய்துக்கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வளசரவாக்கம் ராமாபுரத்தை சேர்ந்த முனுசாமியும், சண்முகப்பிரியாவும் சமூக வலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். இருவரும் நெருங்கி பழகியதால் சண்முகப்பிரியா கர்ப்பம் அடைந்துள்ளார். இந்த விஷயம் வீட்டிற்கு தெரிய வரவே, இருவரது வீட்டாரும் பேசி, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தனர். இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சண்முகப்பிரியாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதற்கிடையே சண்முகப்பிரியா தொடர்ந்து மன உளைச்சலில் இருந்து வந்த நிலையில், மொட்டைமாடியில் செல்லும் மின்வயரை பிடித்து, தற்கொலை செய்துக்கொண்டார். இது குறித்து வளசரவாக்கம் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து வருகின்றனர். திருமணம் ஆகி இரண்டு மாதங்களே ஆன நிலையில் ஆர்டிஓ விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்