விட்டாச்சு லீவு.. 1 கி.மீ.க்கு அணிவகுத்த வாகனங்கள்.. செங்கல்பட்டு டோல்கேட்டில் போக்குவரத்து நெரிசல்

x

போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக செங்கல்பட்டு பரனூர் சுங்கசாவடியில், கூடுதலாக இரண்டு கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளது. தொடர் விடுமுறை காரணமாக சென்னையிலிருந்து பொதுமக்கள், சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர். செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கசாவடியில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 1 கிலோ மீட்டர் தூரத்திற்க்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் சூழல் நிலவி வருகிறது. இதனையொட்டி போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக, பரனூர் சுங்கசாவடியில் கூடுதலாக இரண்டு கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது


Next Story

மேலும் செய்திகள்