கம்பி எண்ணும் பெண் மருத்துவர்-குழந்தைகள், உடல் உறுப்புகள் விற்பனையில் தொடர்பு?-நாமக்கல்லில் பரபரப்பு

x

திருச்செங்கோட்டில் குழந்தை விற்பனையில் ஈடுபட்ட அரசு மகப்பேறு மருத்துவர் அனுராதாவின் 2 கிளினிக்குகளுக்கு போலீசார் சீல் வைத்தனர். இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா, குழந்தை விற்பனை தொடர்பாக கைது செய்யப்பட்ட மருத்துவர் அனுராதா, பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக கூறினார். குழந்தை விற்பனையில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதா க கூறிய அவர், உடலுறுப்புகள் விற்கப்பட்டதாக கூறப்படும் புகார்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்