"கடவுளுக்கு எதிரான வாசகங்களை அரசு அகற்றுமா? - கரு.நாகராஜன் கேள்வி

x

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்அருகே வைக்கப்பட்டிருந்த கடவுளுக்கு ஆதரவான பதாகைகள், கடந்த சில நாட்களுக்கு முன்பு அகற்றப்பட்டன. இதைக் கண்டித்து மயிலாப்பூர் கோயிலில் போராட்டம் நடத்திய பாஜக, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு, ராயப்பேட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டனர். அவர்களை சந்தித்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக பாஜக துணைத் தலைவர் கரு.நாகராஜன், கடவுளுக்கு ஆதரவான வாசகங்களை அகற்றும் அரசு, எதிரான வாசகங்களை அகற்றுமா என்று கேள்வி எழுப்பினார்.


Next Story

மேலும் செய்திகள்