அலேக்காக சுவரை தாண்டிய குதித்த காட்டுயானை... அலறிய மக்கள்... வெளியான பரபரப்பு காட்சி

x

கோவை மேட்டுப்பாளையத்தில் வனத்தை விட்டு வெளியேறிய ஒற்றை ஆண் காட்டு யானை சாலையில் உலாவியபடி அங்கிருந்த சுற்றுச்சுவரை லாவகமாகத் தாண்டிச் சென்றது மக்களை பீதியடையச் செய்தது. மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி செல்லும் சாலையில் உலா வந்த அந்த காட்டு யானை ஓடந்துறை ராமசாமி நகர் பகுதிக்கு சென்றது... வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று யானையை வனப்பகுதிக்குள் விரட்ட முயன்றனர்... அப்போது, காட்டு யானை அங்குள்ள கடை வளாகத்தினுள் நுழைந்தது... மீண்டும் மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில் நிதானமாக உலா வந்து ஒரு சுற்றுச்சுவரை லாவகமாகத் தாண்டியது...


Next Story

மேலும் செய்திகள்