வீட்டு வாசலில் கணவர் கடத்தல் ஆதாரம் காட்டிய மனைவி.. சென்னையில் பரபரப்பு

x

சென்னை, திருவொற்றியூரில் கணவன் கடத்தப்பட்டதாக கூறி சிசிடிவி ஆதாரத்துடன் மனைவி போலீசில் புகாரளித்திருக்கிறார். வடசென்னை, திருவொற்றியூர் காலடிப்பேட்டையை சேர்ந்தவர் சையத் வசீம் அக்கரம். இவருக்கு திருமணமாகி மகன் உள்ள நிலையில், மகனை பள்ளியில் சேர்த்து விட்டு வீடு திரும்பிய வசீம் அக்கரமை, மர்மகும்பல் வீட்டு வாசலிலே வைத்து கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து வசீம் அக்கரமின் மனைவி நபியா பானு சிசிடிவி ஆதாரத்துடன் போலீசில் புகாரளித்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்