யூ-டியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம் - அநியாயமாய் பலியான மனைவி கணவனின் ஆர்வத்தால் நேர்ந்த விபரீதம்

x

யூடியூப்பில் பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்த இயற்கை ஆர்வலரால், அவரது மனைவி பரிதாபமாக உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்த லோகநாயகி என்பவருக்கு, தருமபுரியை சேர்ந்த மாதேஷ் என்பவருடன் கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இயற்கை ஆர்வலரான மாதேஷ், கர்ப்பமான தனது மனைவி இயற்கை முறையிலேயே பிரசவிக்க வேண்டும் எனக் கருதி, மருத்துவமனை அழைத்துச் சென்று பரிசோதனை செய்யாமல் ​வீட்டிலேயே வைத்து சத்தான உணவு கொடுத்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், மனைவிக்கு பிரசவ வலி ஏற்படவே, யூடியூப்பில் பார்த்து மாதேஷ் வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார். அப்போது லோகநாயகிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்த நிலையில், தாயின் வயிற்றில் இருந்து நச்சுக்கொடி வெளியேறவில்லை. இதனால் லோகநாயகி சுயநினைவை இழக்கவே, அவசர அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, இறந்த மனைவியின் உடலை, யாருக்கும் தெரியாமல், மாதேஷ் ஊரில் அடக்கம் செய்ய பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். இந்த விவகாரம் தெரிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்