மாஸ்டரின் யோகாவில் மயங்கிய மனைவி.. கணவனை துண்டு துண்டாக்கிய காமவெறி - அதிர்ந்த ராஜபாளையம்

x

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவரை, தீபாவளி நாள் அன்று, தனது மனைவி மற்றும் குழந்தையின் கண்முன்னே 4 பேர் கொண்ட மர்மகும்பல் வெட்டிக் கொலை செய்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்ததில், திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அதில், சிவகுமாருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு இருந்த யோகா மாஸ்டர் ஐயப்பனுக்கும், காளீஸ்வரிக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்துள்ளது. சொத்தை தனது பெயரில் மாற்றித் தர மிரட்டியபோது, அதற்கு மறுப்பு தெரிவித்த சிவக்குமாரை, காளீஸ்வரி தனது கள்ளக்காதலன் ஐயப்பன் மற்றும் அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட காளீஸ்வரி, ஐயப்பன் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்