புது வீட்டில் துடித்த கணவர்... காப்பாற்ற சென்ற மனைவி பலி - திண்டுக்கல்லை உலுக்கிய சம்பவம்

x

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே, மின்சாரம் தாக்கிய கணவனை காப்பாற்ற சென்ற மனைவி மின்தாக்குதலுக்குள்ளாகி நிகழ்விடத்திலேயே பலியானார். மீனாட்சிபுரத்தை சேர்ந்த பாண்டி - உதயசூரியா தம்பதியினர், கடந்த 15 ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில், புதிதாக வீடு கட்டி வந்துள்ளனர். இன்று வீட்டின் சுவற்றிற்கு தண்ணீர் தெளிக்க சென்றபோது, எதிர்பாராத விதமாக பாண்டி மீது மின்சாரம் தாக்கியதாக கூறப்படுகிறது. அப்போது அவரை காப்பாற்ற முயன்ற அவரது மனைவி உதயசூரியா மீதும் மின்சாரம் தாக்கியதில் நிகழ்விடத்திலேயே அவர் பலியானார். படுகாயமடைந்த பாண்டி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்