"காதல் ஆசை யாரை விட்டதோ" உனக்கு 24... எனக்கு 54... காதல் புறாக்கள் காவல் நிலையத்தில் தஞ்சம்

x

தாரமங்கலம் அருகே மாட்டையாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். விசைத்தறி தொழில் செய்து வரும், இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த 24 வயது விமலா என்ற பெண் கிருஷ்ணன் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றதில், இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. தனது 54 வயது காதலர் மனைவி இல்லாமல் கஷ்டப்படுவதை பார்த்த விமலா, அவரை திருமணம் செய்து வாழ முடிவு செய்தார். இந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருவண்ணாமலையில் தாலி கட்டி திருமணம் கொண்டனர். இதனிடையே மகளை மீட்டு தர கோரி, விமலாவின் தந்தை அய்யம்பெருமாள் தாரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில், தாலி கட்டிய கணவருடன் செல்வேன் என விமலா உறுதியாக கூறியதாலும்,

இருவரும் மேஜர் என்பதாலும், போலீசார் அனுப்பி வைத்தனர். 24 வயது பெண்ணை மணந்த கிருஷ்ணனனுக்கு 24 வயதில் ஒரு மகன் உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்