"என் கார் எங்க.. என் பைக் எங்க" - வாகனங்களை தேடி அலையும் மக்கள்

x

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய கார்களை மீட்கும் பணியில் பொதுமக்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் பல்வேறு குளங்கள் உடைந்ததால், திருநெல்வேலி- திருச்செந்தூர் நெடுஞ்சாலை கடுமையாக சேதமடைந்தது. அப்போது, சாலையில் சென்ற கார்கள் உள்பட ஏராளமான வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. ஸ்ரீவைகுண்டம், பொன்னன்குறிச்சி பகுதிகளில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார்களை மீட்கும் பணியில் பொதுமக்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தண்ணீர் முழுமையாக வடியாத நிலையிலும், தொலைந்து போன இருசக்கர வாகனங்களை தேடி பொதுமக்கள் அலைவது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்