மாமன், மருமகன் செய்த காரியம்..கொத்தாக சிக்கிய அரசு அதிகாரிகள்..மகள் கைது..கொடைக்கானலில் பகீர்

x

கொடைக்கானல் கான்வென்ட் டிப்போ பகுதியில் சங்கரலிங்கம் மற்றும் சந்திரசேகர் ஆகிய இருவர் சேர்ந்து, கடந்த1972ம் ஆண்டு சுமார் 98 சென்ட் நிலம் வாங்கியுள்ளனர். இதே பெயர் கொண்ட நாயுடுபுரம் பகுதியை சேர்ந்த சங்கர் மற்றும் அவரது மருமகன் சந்திரசேகர், இந்த நிலத்தை அபகரிக்க நினைத்தனர். அதன் பொருட்டு, கடந்த 2013ம் ஆண்டு 98 சென்ட் நிலத்திற்கான பட்டா தொலைந்துவிட்டதாக கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளித்து தினசரி நாளிதழிலும் அறிவிப்பாக வெளியிட்டனர். இதனை தொடர்ந்து போலி பட்டா ஆவணங்கள் தயாரித்து தனது மகள் சாந்தி என்பவருக்கு நிலமானது பத்திரபதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் உண்மை வெளிவரவே, சாந்தி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பத்திர எழுத்தர், அப்போதைய சார்பதிவாளர், வழக்கறிஞர் உட்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்