'நாங்களும் ஹோட்டலுக்கு வருவோம்" - சுற்றி சுற்றி உலா வரும் விலங்குகள் - வெளியான சிசிடிவி காட்சி

x

கேரளா மாநிலம் வயநாடு தனியார் விடுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி.யில், புலி, சிறுத்தை, காட்டு யானை என ஒன்றன் பின் ஒன்றாக விலங்குகள் கடந்து சென்ற காட்சிகள் பதிவாகியுள்ளன. தொடர் மழையால் வனப்பகுதிகள் பசுமையாக காட்சியளிக்கும் நிலையில், வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. வயநாடு வனப்பகுதியை ஒட்டியுள்ள தனியார் தங்கும் விடுதிகளில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் இரவு, பகலாக புலி, யானை உள்ளிட்ட வனவிலங்குகள், ஒன்றன்பின் ஒன்றாக கடந்து செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்