கடன் கொடுத்தது ஒரு குத்தமா... இளைஞருக்கு நடந்த கொடுமை ...

x

சென்னையில், வங்கிக் கடனை கட்டத் தவறியதற்காக, ஊழியர்கள் தரக்குறைவாக பேசியதால், மனஉளைச்சலில் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த ரகுராமன் என்பவர், தனியார் வங்கியில் இருந்து 3 லட்சம் ரூபாய் கடன் தனிநபர் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. ஸ்டீல் பாத்திரங்கள் தயாரிக்கும் பட்டரையில் கூலி வேலை செய்பவரான ரகுராமன், திடீரென வேலையை இழந்ததால், குடும்பத்தில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 10 மாதங்கள் வங்கிக் கடனை சரியாக கட்டி வந்த அவருக்கு, அதற்கு மேல் கட்ட முடியாமல் தவித்து வந்துள்ளார். இந்த நிலையில், தனியார் வங்கி ஒப்பந்த ஊழியர்கள் தொலைபேசியிலும், நேரிலும் கடனை கட்டச் சொல்லி, ரகுராமனை தகாத வார்த்தைகளால் திட்டி வந்துள்ளனர். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான அவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்