உடைந்த மேகம்.. மிக்ஜாம் தாக்கம்?... சென்னை மக்களுக்கு வந்த வார்னிங் - அய்யய்யோ.. மறுபடியுமா

x

சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.

இதேபோல், ஆலந்தூர், ஆதம்பாக்கம், கிண்டி, மீனம்பாக்கம், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, தரமணி உள்ளிட்ட பகுதிகளிலும், மிதமான மழை பெய்து வருகிறது. மழையானது தொடர்ந்து பெய்து கொண்டிருப்பதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர்.

சென்னை வண்ணாரப்பேட்டை, ராயபுரம், காசிமேடு, திருவொற்றியூர், எண்ணூர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அவ்வப்போது, கனமழையும் பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

சென்னை அடுத்த நாவலூர், கழிபட்டூர், கேளம்பாக்கம், திருப்போரூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கிழக்கு கடற்கரை மற்றும் ஓஎம்ஆர் சாலைகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்