சட்டென மொத்தமாக மாறிய வானிலை... இடி, மின்னலுடன் ஒரு காட்டு காட்டிய கனமழை - வானிலை அப்டேட்

x

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே தொடர் மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் மழை பெய்தது. ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் கனமழை பெய்தது. இதனால் சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரித்தது. சிவகாசி அருகே விளாம்பட்டி கண்மாயில் நிரம்பிய தண்ணீர் அதிக அளவில் வெளியேறி, விளாம்பட்டி கிராம சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிக்கு உள்ளாகினர். இதனால் விளாம்பட்டி கிராம மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்