தமிழகத்தில் முதன்முறையாக திருக்குறள் மாணவர் மாநாடு | Virudhunagar

x

தமிழகத்தில் முதன்முறையாக திருக்குறள் மாணவர் மாநாடு விருதுநகரில் நடைபெற்றது. விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற இதன் கண்காட்சியில், 133 அதிகாரங்களுக்கு ஏற்ப மாணவர்கள் வரைந்த ஓவியங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. இதனை, திருக்குறள் பேரவை தலைவர் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் திறந்து வைத்தார். இந்த மாநாட்டில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் திரைப்பட இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார், மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்