வாக்குப்பதிவு குளறுபடி..விருதுநகர்,தென்காசியில் அதிர்ச்சி சம்பவம் | Election 2024 | Thanthitv

x

விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உள்பட்ட திருப்பரங்குன்றத்தில், குறைவான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்ததாலும், வெயில் காரணமாக மாலை நேரத்தில் வாக்காளர்கள் வந்ததாலும் வாக்குப்பதிவு தாமதமாக முடிவடைந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள ஒத்தை ஆலங்குளம் கிராமத்தில் வெயில் காரணமாக காலை மந்தமாக வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், மாலை 4 மணிக்கு மேல் அதிக வாக்காளர்கள் வந்தனர். இதனால், இரவு எட்டு மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. மேலும், நேரமின்மை காரணமாக ஒரு சிலர் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டது. குறைந்த அளவு வாக்குச்சாவடி அமைத்ததால் வாக்களிக்க முடியவில்லை என்று அவர்கள் கூறினார்கள்...


Next Story

மேலும் செய்திகள்