"மயான பாதையை ஆக்கிரமித்து வீடு".. “கண்களில் விஷம் அடித்த ஐடி ஊழியர்“ -சமூகவலைதளத்தில் வைரலாகும் வீடியோ

x

விழுப்புரத்தில், சுடுகாட்டு பாதை பிரச்சனையில் எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது விஷம் கலந்த ஸ்பிரேவை அடித்ததாக தரப்பட்ட புகாரின் பேரில் ஐ.டி. ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

மேல்மலையனூரை அடுத்த சித்தாத்தூர் கிராமத்தில், சந்துரு என்பவர் வீடு கட்டி வருகிறார். அவர், சுடுகாட்டிற்கு செல்லக்கூடிய பாதையை ஆக்கிரமித்து வீடு கட்டி வருவதாக கூறப்படுகிறது. இதற்கு அதே பகுதி சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த சந்துரு, வீட்டில் வைத்திருந்த ஸ்பிரே ஒன்றை எடுத்து வந்து, எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது அடித்துள்ளார். ஸ்பிரே கண்ணில் பட்டதும் எரிச்சல் தாங்க முடியாமல் கூச்சலிட்ட நபர்கள், கண்ணில் விஷத்தை அடித்து விட்டதாகவும், கண் பார்வை போய் விட்டதாகவும் கூறி பாதிக்கப்பட்டவர்கள் கதறி அழும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்