வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம்.. விவசாயிகள் திடீர் சாலை மறியல்.. ஸ்தம்பித்த போக்குவரத்து

x

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளால் பரபரப்பு ஏற்பட்டது. வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விளை பொருட்களுடன், ஏராளமான விவசாயிகள் குவிந்த நிலையில், விலை நிர்ணயம் செய்வதில் காலதாமதம் ஆனதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரம் அடைந்த விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மற்றும் வியாபாரிகளை கண்டித்து திருக்கோவிலூர் - விழுப்புரம் நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற மறியலால் போக்குவரத்து பாதித்தது.


Next Story

மேலும் செய்திகள்