கரிக்கட்டையாக கிடந்த பெண் உடல்... விழுப்புரத்தை அதிர வைத்த கொலை... சிக்கிய முதியவரின் பகீர் வாக்குமூலம்

x

விழுப்புரம் அருகே, பெண் எரித்துக்கொலை செய்த சம்பவத்தில் கைதான நபர் அளித்த வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவணிப்பாக்கம் மலட்டாற்று பகுதியில் நேற்று முன்தினம் பெண் ஒருவர் உடல் எரிந்த நிலையில் இறந்து கிடந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், உயிரிழந்த பெண் கடலூரைச் சேர்ந்த வசந்தி என்பதும், விழுப்புரத்தில் துணிக்கடை உரிமையாளர் வீட்டில் வீட்டு வேலை செய்து வந்த அவர், கடந்த 4ம் தேதியன்று வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பவில்லை என்பதும் தெரியவந்தது. மேலும் விசாரணையில், வசந்திக்கும், ரெட்டிக்குப்பத்தை சேர்ந்த தெய்வக்கண்ணு என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்தது கண்டறியப்பட்டது. இதில் தலைமறைவாக இருந்த தெய்வக்கண்ணுவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், தகாத உறவில் இருந்த வசந்தி, வேறொரு ஆண் நபருடன் பழகி வந்ததால், ஆத்திரமடைந்த தெய்வக்கண்ணு, நைசாக பேசி வசந்தியை மலட்டாற்று பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, வசந்தியை கழுத்தை நெரித்துக் கொலை செய்தது மட்டுமல்லாமல், போலீசாரிடம் இருந்து தப்பிக்க உடலை பெட்ரோல் எரித்துக் கொண்டதாகவும் வாக்குமூலம் அளித்தார். அதனைத் தொடர்ந்து தெய்வக்கண்ணுவை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்