சென்னையில் டைஃபாய்டு காய்ச்சலுக்கு பலி.. மக்களே உஷார்

x

சென்னை ஆவடி அருகே காய்ச்சலுக்கு 2 வயது குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்ணனுரை சேர்ந்த சிவசந்திரன் என்பவரின் இரண்டு வயதான யாஷ்விகாவிற்கு கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக காய்ச்சல் இருந்தது. இதனையடுத்து பெற்றோர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். பின்னர் வீடு திரும்பிய நிலையில் மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டு யாஷ்விகா மயங்கி விழுந்தார். பெற்றோர் மருத்துவமனை அழைத்து சென்ற நிலையில் குழந்தை யாஷ்விகா டைஃபாய்டு காய்ச்சல் காரணமாக இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த திருமுல்லைவவாயல் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்