மாவட்ட ஆட்சியரின் தந்தையை கடித்த விஷப்பாம்பு - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

x

மாவட்ட ஆட்சியரின் தந்தையை கடித்த விஷப்பாம்பு - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

பாம்பு கடிக்கு ஆளான ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் தந்தைக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரான ஜானி டாம் வர்கீஸ், தன்னுடைய முகாம் அலுவலகத்தில் தனது தாய் மற்றும் தந்தையுடன் வசித்து வருகிறார்.

இந்தநிலையில் ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸின் தந்தை ஜார்ஜ் வர்கீஸை பாம்பு கடித்துள்ளது.

இதனையடுத்து உடனடியாக அவர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்