வேங்கைவயல் வழக்கு..!மேலும் 5 பேருக்கு டி.என்.ஏ பரிசோதனை | Pudukkottai | Tamilnadu

x

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில், குறிப்பிட்ட சமூகத்தினர் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில், மனிதக் கழிவுகள் கலந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்த புகாரின்பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார், 186 பேரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்தனர். இவ்வழக்கில் 26 நபர்களிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்தப்பட்டு முடிவுகள் வெளிவரவில்லை. இந்நிலையில், புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற அனுமதியின்பேரில், சிறுவன் உட்பட மேலும் 6 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ளப்பட இருந்தது. இதில் ஒருவரது உடல்நிலை சரியில்லாததால், மற்றவர்களுக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பரிசோதனை எடுக்கப்பட்டது. இதன் மாதிரிகள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு, சென்னையில் உள்ள பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பப்பட உள்ளது. இதனிடையே, வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையை, ஒரு நபர் ஆணையம் நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்