"காவல்துறையின் சர்வாதிகார போக்கு" தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கண்டனம்

x

நெய்வேலியில் பாமக போராட்டத்தில் தடியடி நடத்தப்பட்டதற்கு, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், பாமக சார்பில் நெய்வேலில் நடைபெற்ற முற்றுகை போராட்டத்தின் போது, தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் மக்களை அப்புறப்படுத்திய தமிழக காவல்துறையின் சர்வாதிகாரப் போக்கை வன்மையாக கண்டிப்பதாக கூறியுள்ளார். மேலும் போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்