"பினாயில் குடுச்சுட்டேன்,, சந்தோசமா இரு" - வாட்ஸ்அப்பில் வந்த ஆடியோ பெண் எடுத்த முடிவால் சோகம்

x

"பினாயில் குடுச்சுட்டேன்.. சந்தோசமா இரு"

9 மாதத்தில் மனைவியை சந்தேகித்த கணவன்

கைப்பட கடிதம் வாட்ஸ்அப்பில் வந்த ஆடியோ

ரோஷத்தில் பெண் எடுத்த முடிவால் சோகம்

வேலூர் அருகே, திருமணமான இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.அணைக்கட்டு அருகே உள்ள கீழ்கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழரசன் என்பவருக்கும், திருவண்ணாமலையை சேர்ந்த மீனாட்சி என்ற பெண்ணுக்கும் இடையே, கடந்த 9 மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. மீனாட்சியின் விருப்பத்திற்கு மாறாக திருமணம் நடந்ததாக கூறப்படும் நிலையில், கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், மீண்டும் பிரச்சினை ஏற்படவே, மனமுடைந்த மீனாட்சி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய நிலையில், இறப்பதற்கு முன்பாக, மீனாட்சி எழுதி வைத்த கடிதத்தையும் மீட்டனர். அதில், தன்னால் நிம்மதியாக வாழ முடியவில்லை என்றும், இறந்து போன தந்தையிடமே நிம்மதியை தேடி செல்கிறேன் எனவும் குறிப்பிடப்பட்டிருந்து. இந்த நிலையில், மீனாட்சி தற்கொலை செய்வதற்கு 5 நிமிடத்திற்கு முன்பாக, தனது கணவருக்கு வாட்ஸ் அப் மூலம் ஆடியோ ஒன்றை அனுப்பியுள்ள நிலையில், இறப்பில் சந்தேகம் இருப்பதாக பெண்ணின் உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்