வி.ஏ.ஓ. வேலை...ரூ.27 லட்சம் மோசடி செய்த அதிகாரிகள் - திருப்பத்தூரில் பரபரப்பு

x

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே, வி.ஏ.ஓ. வேலை வாங்கித்தருவதாகக்கூறி 27 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர். அதிமுக நிர்வாகி எல்லப்பன் என்பவரின் மகன் சோமு உள்ளிட்ட 4 பேர் கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான தேர்வு எழுதி தோல்வியடைந்தனர். இவர்கள் 4 பேருக்கும் வி.ஏ.ஓ. பணி பெற்றுத்தர, எல்லப்பனிடம் தோட்டக்கலைதுறை உதவி அலுவலர் பாலதண்டாயுதம், தனது கூட்டாளிகள் பரமசிவம், சுரேஷ் மூலம் 27 லட்சம் ரூபாய் பெற்று, இருவருக்கு போலியான பணியாணைகளை வழங்கியுள்ளார். இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் எல்லப்பன் வழக்கு தொடர்ந்த நிலையில், பாலதண்டாயுதம், சுரேஷை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள பரமசிவத்தை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்