லஞ்சம் கேட்ட VAO கொம்பன் படம் பாணியில் அதிகாரியை சிக்க வைத்த விவசாயி

x

கடலூர் மாவட்டம் மதலப்பட்டில், பட்டா பெயர் மாற்றுவதற்கு 40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். மதலப்பட்டு கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரனிடம், கீழ் அழிஞ்சிப்பட்டு கிராமத்தை சேர்ந்த விவசாயி சீனு, நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக மனு அளித்துள்ளார். பெயர் மாற்றம் செய்ய பிராபகரன், 40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படும் நிலையில், இதுகுறித்து சீனு லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். தொடர்ந்து போலீசார் அறிவுரை படி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சீனு வழங்க, அதனை பெற்ற பிராபகரனை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்