` எவிடென்ஸே இல்லாம உன்ன போடுறேன்.... அதான் லட்சியம்' - ரவுடியை போல் மிரட்டிய LIC ஏஜெண்ட்

x

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே, எல்ஐசி அலுவலகத்தில் கிளை மேலாளரும், முகவரும் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கிளை மேலாளரான கெஜராஜ் என்பவரிடம், அதே கிளையில் முகவராக உள்ள இருசப்பன் என்பவர், பாலிசி ஒன்றை புதுப்பிப்பதற்காக சென்றுள்ளார். அதற்கு கிளை மேலாளர் காரணத்தைக் கூறி மறுப்பு தெரிவிக்கவே, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்ட நிலையில், காவல்நிலையத்தில் ஒருவருக்கு ஒருவர் புகார் அளித்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், இருசப்பன் கிளை மேலாளரை செல்போனில் கொலை மிரட்டல் விடுக்கும் ஆடியோ இணையத்தில் பரவி வருகிறது


Next Story

மேலும் செய்திகள்