ரயில் நிலையத்தில்வார்த்தையால் முட்டிக்கொண்ட பாஜக, விசிக - "வந்தே பாரத் ரயில் வந்த நேரம் பரபரப்பு"

x

நெல்லையில் இருந்து விழுப்புரம் வந்த, வந்தே பாரத் ரயிலை, அரசியல் கட்சியினர் பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனர். இரவு 8 மணிக்கு வந்த போது, பாஜகவினர் மலர் தூவி வரவேற்று, பாரத் மாதா கீ ஜே என்று முழக்கமிட்டனர். அப்போது அங்கு இருந்த விசிகவினர் ஜெய் பீம் என்றும் போட்டிப்போட்டு முழக்கங்களை எழுப்பினர். இதனால் அங்கு சிறிது சலசலப்பு ஏற்பட்டது. அதே நேரத்தில், வந்தே பாரத் ரயில் முன்பு பொதுமக்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்