ஆசை மகனை டிராக்டரில் உட்காரவைத்து உழவு செய்த அப்பா... நொடியில் நடந்த பயங்கரம்

x

பண்டாரதோப்பு கிராமத்தில் விவசாயி தண்டபாணி தனது சொந்த டிராக்டரில் அவருடைய 6 வயது மகன் தஷ்வந்த்தை உட்கார வைத்து கொண்டு, நிலத்தை உழுது கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக, குழந்தை கலப்பையில் சிக்கி பலத்த காயம் அடைந்தான். டிராக்டரை நிறுத்தி, குழந்தையை மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி தஷ்வந்த் இறந்தார்.

சம்பவம் குறித்து வந்தவாசி தெற்கு காவல் நிலையத்தில் தஷ்வந்தின் தாய் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தையின் அஜாக்கிரதை செயளால் 6 வயது குழந்தை டிராக்டர் கலப்பையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்