ஆட்டோ ஓட்டுநரை வீட்டுக்கு அழைத்து பாராட்டிய வைரமுத்து - என்ன காரணம் தெரியுமா?

x

கவிஞர் வைரமுத்துவின் பாடல்களை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற ஆட்டோ ஓட்டுநரை நேரில் அழைத்து பாராட்டினார் வைரமுத்து... லூர்துராஜ் என்ற ஆட்டோ ஓட்டுநர் "கவிப்பேரரசு வைரமுத்து திரைப் பாடல்களில் புதுக் கவிதைக் கூறுகள்" என்ற தலைப்பில் ஆய்வு செய்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற நிலையில், வியந்து போய் வீட்டுக்கு அழைத்து பாராட்டியதாக வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், ஆட்டோ ஓட்டுநர் கூட்டத்தில் ஓர் அதிசயம் என அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்