பள்ளி சமையலறையில் "பார்க்ககூடாததை செய்யும் மாணவர்கள்" - அதிர்ந்த பொதுமக்கள்

x

மேட்டூர் அருகே காவேரிபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சமையலறை கூடத்தின் சுவற்றில், மர்ம நபர்கள் மனித கழிவை பூசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்கள் பள்ளிக்கூடம் சென்றதும், துர்நாற்றம் வீசியதால் சமையலறைக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது, சுவற்றில் மனித கழிவு பூசப்பட்டிருப்பதை கண்டு, பள்ளி நிர்வாகத்திற்கு தெரிவித்தனர். இதையடுத்து, தனியார் கட்ட‌டத்தில் சமையல் செய்யப்பட்டது. பள்ளிக்கூட வளாகத்தில், இரவு நேரங்களில் மர்ம நபர்கள் மது குடித்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டியுள்ள பொதுமக்கள், சுற்றுச்சுவர் அமைத்து காவலாளி நியமிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்