"1 ரூபா தந்தா 29 பைசா தான் ரிட்டன் வருது..!" "என்ன சென்ட்ரல் இதெல்லாம் "மத்திய அரசை விளாசிய உதயநிதி

x

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு சுமார் ஆயிரத்து 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் திட்டப்பணிகள், கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள், புதிய பல்நோக்குகூடம், புதிய பன்னடுக்கு வாகன நிறுத்தம் ஆகியவற்றின் தொடக்க விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, மு.பெ.சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு திட்டங்களை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தந்தை பெரியாரும், அண்ணாவும் முதன் முதலில் சந்தித்த இடத்திற்கு வந்திருப்பதாகக் கூறி மகிழ்ச்சி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்