இந்து மகா சபா நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு..வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சி

x

உளுந்தூர்பேட்டையில் அகில பாரத இந்து மகாசபை அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் பெரிய செந்தில் வசித்து வருகிறார்... அவரது வீட்டில் நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசிய நிலையில், இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் யார் என்பதை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்... சம்பவம் நடைபெற்ற போது வீட்டில் உள்ள அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறவில்லை... தொடர்ந்து சம்பவ இடத்தில் உளுந்தூர்பேட்டை துணை கண்காணிப்பாளர் மகேஷ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்... ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்னால் இதேபோல் செந்திலின் வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது


Next Story

மேலும் செய்திகள்