மயக்க மருந்து கொடுத்து மாணவியிடம் செய்த அந்த மாதிரி அசிங்கம்..சென்னையில் அதிர்ச்சி சம்பவம் | Chennai

x

சென்னையில் கல்லூரி மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்து, வீடியோ எடுத்து மிரட்டிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவியை உதயபாஸ்கர் என்ற இளைஞர், தனக்கு திருமணம் ஆனதை மறைத்து காதலித்துள்ளார். ஒருகட்டத்தில், குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த அவர், அதனை வீடியோ எடுத்துள்ளார். மாணவி அவரிடமிருந்து விலக தொடங்கியதும், வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடப்போவதாக மிரட்டியுள்ளார். இதுதொடர்பாக மாணவி அளித்த புகாரின் பேரில், திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், உதயபாஸ்கரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்