காதலனுக்காக காதலி செய்த அசிங்கம்...அதுவும் தோழியின் வீட்டிலேயே...சிவகங்கையை அதிர வைத்த சம்பவம்

x

சிவகங்கை மாவட்டம் திருமயம் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் அருகில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், உடன் படிக்கும் திருபத்தூரை சேர்ந்த தோழியின் வீட்டிற்கு சிறுமி சென்றுள்ளார். அங்கு சிறுமியை அவரது தோழியின் குடும்பத்தினர் நன்கு உபசரித்த நிலையில், அவர் சென்ற பின்பு வீட்டிலிருந்த நகைகள் மாயமானது அவர்களை அதிர்ச்சியடைய செய்தது. இது குறித்து போலீசில் புகாரளிக்கப்பட்ட நிலையில், தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசாருக்கு, சிறுமியின் தோழியே நகைகளை திருடி சென்றது தெரியவந்துள்ளது. திருடிய 100 கிராம் நகைகளையும் சிறுமி அடகு கடையில் வைத்து பணம் பெற முயன்றபோது போலீசார் கையில் களவுமாக பிடித்தனர். விசாரணையில், தனது காதலனை கரம்பிடிக்கவே திருடியதாக சிறுமி வாக்குமூலம் அளித்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிறுமியிடம் இருந்து நகைகளை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்