கோர்ட்டில் ஆஜரான TTF..! "டிச., 13.." - நீதிபதி போட்ட உத்தரவு | TTF Vasan

x

காஞ்சிபுரத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில், பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இதனிடையே, அவரது யூடியூப் சேனலை முடக்குவது குறித்தான வழக்கு, காஞ்சிபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வாசன் தரப்பு விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், விளக்கம் தருவதற்கான எந்தவிதமான ஆவணங்களையும், காவல்துறையினர் தரவில்லை என டிடிஎஃப் வாசன் தரப்பு வழக்கிறஞர் வாதிட்டார். அதனைத் தொடர்ந்து வழக்கை விசாரணையை டிசம்பர் 13ம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதி இனியா கருணாகரன், உடனடியாக வழக்கு சம்பந்தமான நகல் ஆவணங்களை டிடிஎஃப் வாசன் தரப்பிற்கு வழங்க போலீசாருக்கு உத்தரவிட்டார். மேலும், இருசக்கர வாகனம் திரும்பப் பெறுவது குறித்த வழக்கு விசாரணையும், டிசம்பர் 6ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்