ஆட்டோ மீது லாரி மோதி விபத்து - 3 பேர் உடல் நசுங்கி பலி.. வீடு திரும்பியபோது நேர்ந்த சோகம்

x

திருச்சி பெட்டவாய்த்தலையில் நள்ளிரவில் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில், தாய், மகன் உட்பட 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். காரைக்காலில் இருந்து சேலம் மேச்சேரிக்கு சென்ற டிப்பர் லாரி, பெட்டவாய்த்தலை வந்தபோது பழுதானது. அப்போது, எதிரே வந்த ஆட்டோ மீது பயங்கரமாக மோதி அய்யன் வாய்க்கால் ஓரம் கவிழ்ந்தது. மருத்துவமனை சென்றுவிட்டு வீட்டிற்கு ஆட்டோவில் திரும்பிய சுசீலா, அவரது மகன் சரவணன், ஓட்டுநர் அரவிந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லாரி ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பினார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடல்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்